தங்கத்துடன் 9 இலங்கையர்கள் கைது

234 0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 9 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் 2.8 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்ட இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் 9 பேரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயிலிருந்து வருகை தந்த குறித்த 9 இலங்கையர்களும் 2.8 கிலோ தங்கத்தை சங்கிலிகளாக கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.