புதிய கூட்டணி ஆகஸ்ட் 05ம் திகதி-மனோ

198 0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில் புதிய கூட்டணி அமைப்பதற்காக ஆகஸ்ட் 05ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

புதிய கூட்டணியின் சின்னம் அன்றைய தினம் முன்வைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.

அவிஸ்ஸாவனை, புவக்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதாகவும், இரவு விழுந்த குழிக்குள் பகலில் விழப் போவதில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

மிகவும் பிரபலமான கட்சியை பிளவுபடுத்தி இல்லாமல் ஒழிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழு அமைத்துக் கொண்டிருப்பவர்களிடம் அமைச்சர் ​வேண்டுகோள் விடுத்தார்.