மன்னாரில் 203 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

173 0

பராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் – மதவாச்சி வீதியில் 200 கிலோவுக்கும் அதிக கேரள கஞ்சாவைக் கொண்டு சென்ற லொறியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த லொறியிலிருந்து 203 கிலோ 265 கிராம் கேரள கஞ்சா மீட்க்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 63 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.