ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மாத்தளைக்கு விஜயம்

226 0

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஆராயும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் மாத்தளையில் உள்ள பல பண்ணைகளுக்கு இன்று விஜயம் செய்கின்றனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசுக்கள் இறந்தமை குறித்த விசாரணைகளுக்காகவே ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் மாத்தளை பண்ணைகளுக்கு இன்று விஜயம் செய்கின்றனர்.

பல நோய்களினால் பாதிக்கப்பட்ட பசுக்களை 5 இலட்சம் ரூபாய்க்கு பண்ணையாளர்களுக்கு விற்கப்பட்டமை தொடர்பில் பல புகார்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் அளிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மாத்தளை மாவட்டத்தில் இஹலவெல, கந்துருகஸ்யாய மற்றும் மனன்வத்த பகுதிகளில் அமைந்துள்ள பண்ணைகளுக்கு இன்று விஜயம் செய்கின்றனர்.

உரிய தீர்ப்பை வழங்குவதற்காக இந்த விஜயம் அவசியமானதாக இருக்கும் என்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.