கொழும்பில் பலத்த மழை – 50 வீடுகள் நீரில் மூழ்கின

303 0

imagesகொழும்பில் பெய்த பலத்த மழை காரணமாக பெரண்டியாவத்தை பகுதியில் 50 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

குறித்த வீடுகளுக்குள் சுமார் ஒரு அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளதாக தெரிவித்துள்ள கொழும்பு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம், வடிகான் கட்டமைப்புக்கள் சீரின்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொழும்பு உள்ளிட்ட அநேகமான பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவானது. அதிகபடியாக 59.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி இரத்மலானை பகுதியில் பதிவாகியுள்ளது.

கொழும்பில் 26.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதாக ள கொழும்பு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.