வீட்டில் தீயில் எரிந்து உயிரிழந்த பெண்!

258 0

வென்னப்புவ பொலிஸ் பிரிவில் பண்டிருப்புவ, லுனுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சமயலறைக்குள் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். 

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 07.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே பதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் அந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.