தோட்டக்காணிக்குள் பதுக்கிவைக்கப்பட்ட கஞ்சா மீட்பு

244 0

யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டக்காணியினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரளா கஞ்சா நேற்று மாலை வல்வெட்டித்துறை பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்டக்காணியிலுள்ள பற்றைகளுள் எடுத்துச் செல்ல ஏதுவாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவே விவசாயி ஒருவர் வழங்கிய தகவலையடுத்து பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 30 கிலோகிராம் வரை நிறையுடைய கஞ்சாவே வல்வெட்டித்துறை பொலிசாரினால் மீட்கபட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிசார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.