காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

277 0

நீர்க்கொழும்பு கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவரின் சடலம் உடப்புவ – புனபிடிய பகுதியின் கடற்கரையில் ஒதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நான்கு பேர் பயணித்த படகொன்று கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து படகில் பயணித்த மூன்று பேர் உயிர்தப்பியுள்ளதுடன், மீனவர் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவருடைய சடலமே கரையோதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது,

நீர்க்கொழும்பு – ஏத்துக்கால் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.