வீதியில் நடந்து சென்ற நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

303 0

யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்ற நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கானவர் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலையின் பின்பகுதி வெட்டுக் காயமடைந்த குறித்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.