பாதுகாப்பு தொடர்பிலான தன்னுடைய கருத்தை இதுவரையில் எவருமே கவனத்திற்கொள்ளவில்லை- சரத்

279 0
நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான தன்னுடைய கருத்தை இதுவரையில் எவருமே கவனத்திற்கொள்ளவில்லை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தை 90 சதவீதம் முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாக அண்மையில் பாதுகாப்பு செயலாளர் பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் தெரிவித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் இல்லாத ஒருவர் இவ்வாறான ஒரு கருத்தை தெரிவிப்பதன் மூலம் தீவிரவாத்தை இல்லாமல் செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அரசியல்வாதிகளின் கருத்துக்களை கேட்டு ஏமாறாமல் சுயபுத்தியுடன் செயற்பாடுமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.