மஹிந்த ராஜபக்சவின் மைத்துனருக்குப் பிணை(காணொளி)

425 0

new-pictureமல்வான பகுதியிலுள்ள 16 ஏக்கர் காணி மற்றும் அங்குள்ள சொகுசு மாளிகை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மைத்துனரான செல்வந்த வர்த்தகர் திருக்குமரன் நடேசனுக்கு பூகொட நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஐம்பதாயிரம் ரூபா ரொக்கம் மற்றும் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு பூகொட நீதவான் டி.ஏ.ருவான் பதிரன உத்தரவிட்டுள்ளார்.

எனினும் கடவுச் சீட்டை பறிமுதல் செய்த நீதவான், எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவிற்கு சொந்தமற்றது என கூறப்பட்ட மல்வான 16 ஏக்கர் காணி மற்றும் சொகுசு மாளிகை தொடர்பிலான விசாரணைகளுக்காக பசில் ராஜபக்சவின் சகோதரியான நிரூபமா ராஜபக்சவின் கணவரான திருக்குமரன் நடேசன் எப்.சீ.ஐ.டி. க்கு இன்று அழைக்கப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.