காவல் நிலையத்திற்குள் முதலை

431 0

13121நொச்சியாகம காவல் நிலையத்திற்குள் நுழைந்த பாரிய முதலை ஒன்றினால் அதிகாலை வேளையில் நுழைந்தது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த முதலையை காவல் நிலையத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு காவல்துறையினர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் எவ்வளவு முயற்சித்தும் அந்த முதலையை அவர்களால் வெளியேற்ற முடியாத நிலையில் காவல்துறை குற்ற தடுப்பு பிரிவின் உதவி நாடப்பட்டுள்ளது.

இறுதியில் முதலை வெளியேற்ற முடியாமல் காவல்துறை அதிகாரிகள் முதலை தொடர்பில் வில்பத்து வனவிலங்கு அலுவலகத்தில் அறிவித்துள்ளனர்.

வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு முதலையை பிடித்துள்ளனர்.

அதன் பின்னர் முதலையை வில்பத்து காட்டில் உள்ள ஏரி ஒன்றில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.