இரு பிரேரணைகளையும் தோற்கடிப்போம்- ஐ.தே.க

331 0

அரசாங்கத்துக்கும் அதேபோன்று அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கும் எதிராக கொண்டுவரப்பட்டுள்ள இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் தோற்கடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமாகிய அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளினதும் பங்களிப்புடனான தெரிவுக் குழுவின் மூலம் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர் நிரபராதியானால், அவருக்கு ஆதரவு வழங்கவுள்ளோம்.  யாராவது ஒருவரினால் முன்வைக்கப்படும் காரணமின்றிய குற்றச்சாட்டுக்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணி ஒரு போதும் உடன்படமாட்டாது எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.