தர்காநகரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம்- பொலிஸ்

301 0

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்ததாக தெரிவித்து, சந்தேகத்தின் பேரில் தர்காநகரில் கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,  தற்கொலை குண்டுதாரியான மொஹமட் பசீர் மொஹமட் பஸ்ஹான் என்பவனுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.