பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

334 0

kilinochchiபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக இன்று கிளிநொச்சி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

மலையகப்பகுதியில் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தொடர்கவனயீர்ப்ப போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிளநொச்சி மாவட்ட சர்வமத ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி ஏ-9 வீதியில் பளையகச்சேரி முன்பாக ஆரம்பமான பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகத்;தை சென்றடைந்தது.

மலையக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் விரைந்து செயற்படவேண்டும் என்றும் இதற்கு முழுமையான ஆதரவை வழங்கியிருப்பதாகவும் இதனை உரிய தரப்பு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரி ஜனாதபதி மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கான மகஜர்களை மாவட்ட செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ர.பிருந்தாகரனிடம் மகஜர்களை கையளித்துள்ளனர்.