அரச தாபனக் கோவையில் மாற்றங்கள்

320 0

2bffa242a7ad5cd9415254558ef77522_xlதகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு ஏற்புடையதாக அரச தாபனக் கோவை மறுசீரமைக்கப்படவுள்ளது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதற்கென குழுவொன்றை நியமித்துள்ளார்.

இதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த ஜே.ஜே.ரட்னசிறி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சின் நிறுவனப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாஸ உள்ளிட்ட நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இருவரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஓர் அதிகாரியும் குழுவின் உறுப்பினர்களாக செயற்படுவர்கள்.

குழுவின் கூட்டத்தை விரைவாகக் கூட்டி, தாபனக் கோவை மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கையொன்றை விரைவில் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.