பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு சீனா பயணம்

283 0
aefe34f2ef2fc46f5ec03d92aadc6a80_xlபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொருளியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி சீனாவில் இடம்பெறும் 7ஆவது சியாங்சன் பேரவை மற்றும் இரண்டாவது சீன இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.

நேற்று ஆரம்பமான மகாநாடு 12ம் திகதி வரை நடைபெறும். 12ம் திகதி முதல் 15ம் திகதி வரை மற்றைய மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் விமானப்படைத்தளபதி எயாh ;மார்ஷல் கபில ஜெயம்பதி கடற்படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் எஸ்எஸ் ரணசிங்க இலங்கை இராணுவத்தின் தொண்டர் படை பிரிவு மேஜர் ஜெனரல்  எச்சீபீ குணதிலக இவர்களுடன் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் (வெளிவிவகார) செல்வி சசிகலா பிரேமவர்தன ஆகியோரும் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.