ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று மைத்திரி விசேட உரை

642 0

president-leave-2-jappan-001ஆசிய வலயத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

34 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரையொன்றையும் நிகழ்;த்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் ஆசிய வலயத்தின் அபிவிருத்தி தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதன்போது இலங்கைக்கும் ஏனைய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்.