பௌத்த மத சரத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

308 0

tna1-1024x6832அரசியல் அமைப்பில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சரத்துக்களை தொடர்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றமும் ஏனைய மதத் தலைவர்களும் பௌத்த மதம் தொடர்பான சரத்துக்களை மாற்றாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இதேவேளை, வாரத்தைகளால் அல்லாமல் நடைமுறையில் பௌத்தமதத்தை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.