புதிய கட்சி தம்மால் அல்ல, மக்களால் உருவாக்கப்படும் – மஹிந்த

403 0

mahinda-celibrating-posan-in-japen-007-542x406ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் இரத்தினபுரியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் ஊடாக அரசாங்கதிற்கான மக்கள் எதிர்ப்பை அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணிக்கு பாரிய அளவிலான ஆதரவொன்று கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதிய கட்சி தம்மால் உருவாக்கப்படுவதல்ல, அது மக்களால் உருவாக்கப்படுவது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.