ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில்

234 0

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சம்பந்தமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

எனினும் ரஞ்சன் ராமநாயக்கவின் இந்தக் கருத்து நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்து அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.