ஆட்கடத்தல்கள் குறித்து முன்னாள் கடற்படைத் தளபதியிடம் விசாரணை!

319 0

1945440863wasantha-karannagodaகடந்த 2008 – 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று முன்னிலையானார்.

வசந்த கரன்னகொடவை விசாரிப்பதற்கான நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், இன்று அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையானார்.

வசந்த கரன்னகொட கடற்படை தளபதியாக கடமையாற்றிய காலத்தில் 5 தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டிருந்த நிலையில், இவர்கள் வெலிசறை, கோட்டை மற்றும் திருகோணமலை நிலத்தடி முகாம் ஆகிய கடற்படையின் கட்டப்பாட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களது விடுதலை தொடர்பில் கப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெளிவாகியுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வது குறித்து சட்டமா அதிபர் திணைக்களமே தீர்மானிக்க வேண்டுமென கடந்த வழக்கு விசாரணையின்போது கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.