விக்னேஸ்வரன் மீது வாசு தொடர் குற்றச்சாட்டு!

336 0

vasudeva-720x480வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எனது உறவினர் என்ற போதிலும் அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

என்னிடம் இருப்பது உறவுமுறைக்கான அரசியல் அல்ல. அரசியலுக்கான உறவுமுறை. விக்னேஸ்வரன் உறவினர் என்றாலும் அவரது கருத்துக்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தெற்கில் இனவாதத்தை தூண்டுவதாக என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து கவலையடைகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.