விக்னேஸ்வரனைக் கைது செய்யக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

293 0

colombo-demo-051016-seithyவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைது செய்து சிறையில் அடைக்குமாறு வலியுறுத்தி கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பில தலைமையில் கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 100 பேர் அளவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உருவப்பொம்மைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததோடு நெற்றியில் கறுப்பு பட்டிகளை கட்டியபடி தங்களது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தினர். தேசத்துரோகி வடமாகாண முதலமைச்சரைக் கைது செய்க, தெற்கில் ஒரு சட்டம், வடக்கிற்கு இன்னுமொரு சட்டமா?, ஈழ தேசத்திற்கு இடமில்லை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.