புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

402 0

பொல்கஹவெல, யாங்கல்மோதர பகுதியில் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பு 7 பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சடலம் பொல்கஹவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.