டினர் பெரல் வெடித்ததில் சிறுவன் பலி

386 0

பொலன்னறுவை, கல்கெடிதமன பகுதியில் உள்ள வீடொன்றின் டினர் பெரல் ஒன்று வெடித்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு சிறுவன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று (24) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் புலதிஸிபுர பகுதியை சேர்ந்த 10 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

அத்துடன் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கவலைக்கிடமான நிலையில் பொலன்னறுவை ​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

சம்பவம் தொடர்பில் புலதிஸிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.