கொழும்பில் துப்பாக்கிச் சூடு

238 0

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் சற்றுமுன் கிராண்ட்பாஸின் மெல்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த பெண் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கிரேன்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.