உலக வங்கியின் உயர் பிரதிநிதி இலங்கையில்

269 0

தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் நேற்று கொழும்புக்கு வந்துள்ளார். 

உலக வங்கியின் உப தலைவரின் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும். இவர் இங்கு மூன்று நாட்களுக்கு தங்கியிருப்பார். 

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்தங்களுக்கு எவ்வாறு வங்கி ஆதரவளிக்க முடியும் என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதே இவரது விஜயத்தின் நோக்கம். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இராஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, கொழும்பு மேயர், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.