இரணைமடு விசாரணைக்குக் குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

296 0

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய ஆளுநர் நியமித்த உண்மையைக் கண்டறியும் குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதன் அவர்களால் ஆளுநரிடம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களும் இதன்போது உடனிருந்தார்.