அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை!

255 0

அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றனது. 

இந்த சம்பவம் தொடர்பில் அண்மையில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸிடமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வாக்குமூலம் பெறப்பட்டது.