மாகாண சபை தேர்தலை சுதந்திர கட்சியே காலம் கடத்தியது – துஸார இதுனில்

268 0

மாகாண சபை தேர்தலை  காலவரையறையின்றி  பிற்போடுவதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர்   பைஸர்  முஸ்தபாவே முன்னெடுத்தார். தற்போது ஐக்கிய தேசிய கட்சியிடம்  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.  தேர்தல் முறைமை தொடர்பில் காணப்படுகின்ற முரண்பாடுகளை  திருத்திக் கொண்டு இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டுக்குள் மாகாண சபை தேர்தல் இடம் பெறும் என  ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஸார இதுனில் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று  புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a comment