பொதுவேட்பாளருக்கு இனியொருபோதும் இடமில்லை – ஐ.தே.க.

305 0

ஐக்கிய தேசிய கட்சி இனியொருபோதும் பொதுவேட்பாளரை களமிறக்கப்போவதில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் ஒருவரையே களமிறக்க தீர்மானம் எடுத்துள்ளோம். எனினும் தேர்தல் வரையில் தேசிய அரசாங்கமாக பயணிக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே உள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்தார்.

தேசிய அரசாங்க உத்தேச யோசனையை அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் முன்வைத்து அதன் அங்கீகாரத்தை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கை தேயிலை சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்தும் தேசிய அரசாங்க முயற்சிகள் குறித்தும் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

Leave a comment