சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான மரங்களை இன்று கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை காட்டுப்பகுதியில் வியாபாரத்திற்கு கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
எட்டு அடி தொடக்கம் பத்து அடிகளைக் கொண்ட 24 பாலை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவற்றின் பெறுமதி பதினைந்து இலட்சம் ரூபா வரை பெறுமதியானது என்றும் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


