டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமுல்ப்படுத்துவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த வருடம் ஆறாயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஸீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயினால் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடத்தை விட இவ்வருட ஆரம்பப் பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பிரஸீலா சமரவீர கூறினார்.


