முக்கிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம்(09-02-2019) மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ளது.
நாளை இரவு ஒன்பது மணி முதல் மறுநாள் பிற்பகல் 3.00 மணி வரையே இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு 01, 13, 14 மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறான நீர் விநியோகம் இடம்பெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.