குழந்தையை கொலை செய்த தாயை விசாரணை செய்ய உத்தரவு

4364 0

புத்தளம், சாலியவெவ பகுதியில் குழந்தையை கொலை செய்து கலா ஓயாவிற்குள் வீசிய தாயை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய புத்தளம் மாவட்ட வைத்தியசாலை உத்தரவிட்டுள்ளது. 

தெனுரி திஸாரா என்ற 4 வயதுடைய சிறுமியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சிறுமியை கொலை செய்து கலா ஓயாவிற்குள் வீசியதாக சிறுமியின் தாய் நேற்று பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார். 

அதனடிப்படையில் 21 வயதான குறித்த தாய் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் குறித்த சிறுமியின் சடலத்தை தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

Leave a comment