போதிய வசதிகள் இல்லாத சர்வதேச பாடசாலை ரத்து செய்ய ஆளுநர் நடவடிக்கை-அசாத் சாலி

214 0

மேல் மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

போதுமான வசதிகள் இல்லாத சர்வதேச பாடசாலைகள், தம்மைச் சீராக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால் அவற்றின் அனுமதி இரத்துச் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனித மரியாள் பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இப்பாடசாலைகளின் சேவைகளை ஆராய்வதற்கென ஒரு விஷேட குழுவை அனுப்பவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.  

Leave a comment