மிளகு இறக்குமதி உடனடியாக நிறுத்தம்-பி.ஹரிஸன்

227 0

உள்நாட்டு மிளகு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து மிளகு இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தியிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற என்டப்ரைஸிஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் மிளகு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவும் நோக்கிலே மிளகு இறக்குமதியை நிறுத்தியதாகவும், உளுந்து உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு இறக்குமதி செய்யப்படும் உளுந்து ஒரு கிலோவிற்கு 200 ரூபா வரி அறவிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் பி.ஹரிஸன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment