பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து!

264 0

பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பாரவூர்தியொன்று குடை சாய்நது விபத்துக்குள்ளாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவமானது இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி ஒன்று பூநகரி தனங்கிளப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பாரவூர்தியின் டயர் காற்றுப்போனதால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் இவ்விபத்தில் பாரவூர்தியில் சென்ற சாரதி உட்பட எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment