மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கை வேண்டாம்- அனுர விஜயதுங்க

412 0

மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளாதிருக்குமாறு விவசாய பிரதிப் பணிப்பாளர் அனுர விஜயதுங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

சேனா படைப்புழுவின் தாக்கத்திற்கு உள்ளான சுமார் ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோள பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்திருப்பதாக விவசாய பிரதிப் பணிப்பாளர் விஜயதுங்க தெரிவித்துள்ளார். 

பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பிலான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த நிலையில் மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளாதிருக்குமாறு விவசாய பிரதிப் பணிப்பாளர் அனுர விஜயதுங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

Leave a comment