ஸ்ரீ.சு.கட்சிக்கான புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்

199 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய பல மாவட்டத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி கொழும்பு மாவட்டத்துக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக திலங்க சுமதிபாலவும், கம்பஹா மாவட்டத்துக்கு லசந்த அழகியவண்ணவும், களுத்துறை மாவட்டத்துக்கு மஹிந்த சமரசிங்கவும், காலி மாவட்டத்துக்கு சான் விஜயலால் டிசில்வாவும், கண்டி மாவட்டத்துக்கு எஸ்.பி.திஸாநாயக்கவும், கேகாலை மாவட்டத்துக்கு ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும், மாத்தறை மாவட்டத்துக்கு விஜயதானாயக்கவும், அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு மஹிந்த அமரவீரவும், குருணாநகல் மாவட்டத்துக்கு தயசிறி ஜயசேகரவும், பதுளை மாவட்டத்துக்கு நிமால் சிறிபால டிசில்வா, அனுராதபுரம் மாவட்டத்துக்கு துமிந்த திஸாநாயக்கவும், அம்பாறை மாவட்டத்துக்கு சிறியாணி விஜேவிக்ரமவும், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு அங்கஜன் இராமநாதனும், மாத்தளை மாவட்டத்துக்கு லக்ஷமன் வசந்த பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment