படைப்புழுவை ஒழிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை

231 0

நாடு முழுவதும் பயிர்செய்கைகளை அழித்து வரும் சேனா படைப்புழுவினை ஒழிப்பதற்காக பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 15 வகையான பரிந்துரைகளை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுயதயாரிப்பு முறை மூலம் படைப்புழுவினை ஒழிப்பதற்கான பரிந்துரைகளை சில விவசாயிகள் முன்வைத்ததாகவும், அவற்றை பரிசோதனைக்குட்படுத்தி விவசாய காணிகளுக்கு பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் விவசாய திணை்ணளம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் படைப்புழுவை ஒழிப்பதற்கான ஏதேனும் முறைமைகள் இருக்குமானால் விவசாய திணைக்களத்துக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை படைப்புழுவினை ஒழிப்பதற்காக ஐந்து வகையான கிருமிநாசினிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment