போர் இன்னும் ஓயவில்லை –மாவை சேனாதிராஜா-

492 0

tna_3ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர தமிழ் மக்களின் உரிமைப் போர் இன்னும் முடிவடையவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜ தெரிவித்துள்ளார்.
வடமாகாண அரசாங்க நிர்மாண நிர்மாவணிகள் சங்கத்தின் கூட்டம் காலை யாழ்.பொது நூலகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்iகியல்:-
புல அழிவுகளை தந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து பொது மக்கள் இன்னமும் மீளவில்லை.
இங்கு பல அபிவிருத்தித்திட்டங்கள், கட்டட நிர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக இங்கு ஏராளமான வங்கிகள் கால் பதித்துள்ளன. அவர்கில் பெரும்பாலான வங்கிகள் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்கவில்லை. குறிப்பாக மக்களுடைய முதலீடுகள் போன்ற தேவைகள நிறைவு செய்யப்படவில்லை. இவ்வாறு மக்களுக்கு பயன்படாத சில வங்கிகள் இணங்காணப்பட்டுள்ளன.
மக்களின் பல தேவைகள் இன்னமும் தீர்க்கப்படாமலே உள்ளது. குறிப்பாக அரசியல் தீர்வு எமக்கு கிடைக்கவில்லை. பொருளாதார ரீதியான மாற்றங்களும் எம் மக்களிடத்தில் இருந்து எழவில்லை. இவ்வாறான மாற்றங்கள் நடைபெற வேண்டும்.
போர் இன்னமும் முடியவில்லை. ஆயுதப் போராட்டமே முடிவுக்கு வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.