ஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு, விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்

211 0

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவமானது நேற்று மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொழும்பு – 13 ஐச் சேர்ந்த 32 வயதான எண்டன் மைக்கல் நிஷாந்தன் குறூஸ் என்பவரே காயடைந்துள்ளார். குறித்த நபர் முச்சக்க வண்டியொன்றில் பயணிக்கும்போது அவரைப் பின் தொடர்ந்து வந்துள்ள அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.

இதன் பின்னர் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave a comment