முன் கூட்டிய நிதியொதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

199 0

இவ் ஆண்டுக்கான முன் கூட்டிய நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு இன்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், இன்று முதல் முதல் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் இது வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி இந்த சட்டமூலத்தை பாராளுமன்றில் முன்வைக்கவுள்ளதுடன், மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகி, இறுதி வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி நடத்தப்படும்.


Leave a comment