வரவு-செலவுத் திட்டம் மார்ச் 05 ஆம் திகதி

201 0

எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  தலை­மையில் நேற்று நடை­பெற்ற  அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லேயே   இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. 

இதன்­போது  நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட    யோச­னைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது. 

அந்­த­வ­கையில் 2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்­துக்­கான ஒதுக்­கீட்டுச் சட்டம்   இம்­மாதம்  7 ஆம் திகதி  நிதி­ய­மைச்­ச­ரினால் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  

இவ்­வ­ரு­டத்தின் முதல் நான்கு மாதங்­க­ளுக்­கான இடைக்கால கணக்கறிக்கை அண்மையில்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment