களுத்துறை துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது

207 0

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  – தொட்டுபல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பயாகல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம்  திகதி இரவு 10.35 மணியளவில்  காரில்  பயணித்த இனம் தெரியாத நபர்கள் இருவரால் மேற்படி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் களுத்துறை –  நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு   சிகிச்சை பெற்று வந்தார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் எழுந்த பிரச்சினைக்கு அமைவாகவே இத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந் நிலையிலேயே துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய நபர் இன்று அதிகாலை துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 35 வயதுடைய சந்தேக நபரை இன்றைய தினம் களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

Leave a comment