பொலிஸ் விசாரணையின் போது நஞ்சருந்திய கைதி பலி

208 0

தும்மலசூரிய பொலிஸ் நிலையத்திற்குள் நபர் ஒருவர் நஞ்சருந்தி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (30) மாலை விசாரணை ஒன்றின் போது குறித்த நபர் நஞ்சருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தும்மலசூரிய, வதரம்ப பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த நபர் பல வருடங்களாக அவருடைய மனைவியுடன் பிரச்சினையில் இருந்ததாகவும் குறித்த நபரின் மனைவி பல வருடங்களாக வெளிநாட்டில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 29 ஆம் திகதி குறித்த நபர் தனது மனைவியுடன் சமாதானமாக விருப்பம் தெரிவித்த போதும் அதற்கு அவருடைய மனைவி விருப்பம் தெரிவிக்காததன் காரணமாக குறித்த நபர் நஞ்சருந்தியுள்ளதாக 

நஞ்சருந்திய குறி்தத நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment