அனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு- ரணில்

258 0

வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் புதிய அரசியலமைப்பின் கீழ் பிரிக்கப்படாத ஒரு நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாங்கள் முன்வைப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஜவினால் இன்று சபையில் முன்வைக்கப்பட்ட ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

குறித்த வாக்கெடுப்பில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிபெற்றது.

Leave a comment