தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சிறிது நேரத்தில்

250 0

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வினால் கொண்­டு­வ­ரப்­படும் நம்­பிக்கை பிரே­ர­ணையை ஆத­ரிப்­பதா? இல்­லையா என்­பது குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன்­று­காலை கூடி முடி­வொன்­றினை எடுக்­க­வுள்­ளது.

எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மையில் இன்­று­காலை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழு கூடு­கின்­றது. இந்தக் கூட்­டத்தில் இவ்­வி­டயம் குறித்து ஆரா­யப்­பட்டு தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்தை மீண்டும் கொண்­டு­வ­ரு­வ­தற்கும் அந்த முன்­ன­ணி­யினால் பிரே­ரிக்­கப்­படும் ஒரு­வரை பிர­த­ம­ராக நிய­மிப்­ப­தற்கும் தாம் ஆத­ரவு வழங்­கு­வ­தாக 14 கூட்­ட­மைப்பு எம்.பி.க்களும் கையெ­ழுத்­திட்டு ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பி­யி­ருந்­தனர். இந்த நிலையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வான பிரே­ர­ணைக்கு கூட்­ட­மைப்­பினர் ஆத­ரவு வழங்­கு­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

பாரா­ளு­மன்­றத்தில் இன்று ஐக்­கிய தேசிய கட்சி இரண்டு பிரே­ர­ணை­களை முன்­வைக்­க­வுள்­ளது. இதில் ஜனா­தி­பதி நிய­மித்த பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவின் மீதும் அவ­ரது அமைச்­ச­ரவை மீதும் நம்­பிக்கை இல்லை என ஜே.வி.பி கொண்­டு­வந்த பிரே­ரணை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் 121 வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­ட­துடன் மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.  இதனைக் கருத்தில் கொண்டு ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என கோரும் பிரே­ரணை ஒன்­றிணை ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் முன்­வைக்­க­வுள்­ளனர்.

இந்தப் பிரே­ரணை கடந்­த­வாரம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்­த­போ­திலும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­திற்­கு­அ­மைய இன்­றை­ய­தினம் அது சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த பிரே­ர­ணையை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஜே.வி.பி.யும் ஆத­ரிக்­க­வுள்­ளன.

பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு பெரும்­பான்­மையை நிரூ­பிக்கும் பிரே­ர­ணையை அக்­கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாச கொண்­டு­வ­ரு­கின்றார். அந்த பிரே­ர­ணையை ஜே.வி.பி ஆத­ரிக்­கப்­போ­வ­தில்லை என ஏற்­க­னவே கூறி­யுள்­ளது. இந்­நி­லையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் இது­வரை எந்த தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை என அக்­கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

Leave a comment